Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெஸ்சிக்கு மிரட்டல் விடுத்த மெக்சிகோ பாக்சர்

நவம்பர் 29, 2022 01:31

கத்தார்: கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோவிற்கு எதிராக களம் இறங்கியது. இதில் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற முடியும் என நிலையில் அர்ஜென்டினா 2-0 என மெக்சிகோவை வீழ்த்தியது. இந்த போட்டி முடிந்த பின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்களது அறையில் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர். 

அப்போது மெக்சிகோ வீரர் அணியும் ஜெர்சிக்கு மேல் அர்ஜென்டினா வீரர்கள் குதிப்பது போன்றும், மெஸ்சி ஜெர்சியை காலால் மிதித்துக் கொண்டிருப்பது போலவும், ஜெர்சியால் அறையை க்ளீன் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகின. இது மெக்சிகோ நாட்டின் குத்துச் சண்டை வீரர் கனாலோ அல்வாரேஸ்-க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ''நம்முடைய ஜெர்சி மற்றும் தேசியக்கொடியால் அறையை மெஸ்சி சுத்தம் செய்வதை பார்த்தீர்களா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், ''நான் மெஸ்சியை பார்த்துவிடக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டால் அவருக்கு நன்றாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார். இது டுவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மெஸ்சியின் ரசிகர்கள் சிலர், மெஸ்சி தரையை சுத்தம் செய்வது போன்று அதில் காட்டப்படவில்லை. மேலும், மெக்சிகோ கொடி அங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அல்வாரஸ், மெக்சிகோவை அவமானப்படுத்தினர் எனக் குறிப்பிட்டார். முன்னாள் அர்ஜென்டினா வீரர் செர்ஜியோ, ''நீங்கள் பிரச்சினையை தேடாதீர்கள். விளை யாட்டு முடிந்த பின்னர், வீரர்கள் அறையில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. விளையாடிய பின்னர், வியர்வையால் நனைந்திருக்கும் ஜெர்சியை வீரர்கள் தரையில் போட்டு வைப்பது வழக்கமானதுதான் எனத் தெரிவித்தள்ளார். அல்வாரேஸ் ''நான் அர்ஜென்டினாவிற்கு மரியாதை அளிக்கிறேன். மெக்சிகோவிற்கும் மரியாதை அளிக்க வேண்டும். நான் அர்ஜென்டினாவை பற்றி பேசவில்லை. மெஸ்சி செய்த மோசமான காரியத்தை பற்றி பேசுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்